உயிரானதும் தாயாகி,
நடை பயின்றதும் ஆசானாகி,
இள வயதில் தோழியாய்,
வாலிபத்தில் காதலியாய்,
முதிர்வினிலே மனைவியாய்,
முதுவயதில் மகளாய், - நீ
இறந்தபின்னும் உன் உடலை...
பூமாதேவியாய் தாங்குபவள் !!
சிற்ப கலை பயிலாத - ஒரு
சிறந்த சிற்பி !!
மனிதனை மண்ணுக்கு கொண்டுவரும் பிரம்மாஹ்!
சில வேளை ...
மனிதனை மண்ணுக்குள் அனுப்பி வைக்கும் எமன் !!!
?!
*- தமிழ் -*



