கண்ணை விட்டு போன...
பிறகு,
என்னை விட்டு போன...
இப்ப
மண்ணை விட்டு போன பிறகும்,
எனக்குள் ஏண்டி
உன்னை விட்டு போயிருக்க...?
பித்து மனம் இப்பவெல்லாம்,
செத்துபோக நினைக்குதடி...
விட்டிடுவன் என் உசிரை
வீட்டில் சனம் இல்லையெண்டா !
என்னை நம்பி நாலுசிரு
எதிலையா நிக்கையில,
செத்த உண்ட நினைப்பால
பித்துக்கொண்டு நானும் செத்தா,
பாவம் இந்த சொந்தங்களை
பாக்குறது யாரு புள்ளை ?
வாழ்க்கையை இவங்களுக்காய்
வாழ்ந்துவிட்டு ராத்திரியில்
வானத்தில நான் பாக்க,
வந்து முகம் காட்டி விடு,
நிலவாக - முழு
மதியாக.
*- தமிழ் -*

No comments:
Post a Comment