Saturday, December 28, 2013

நீங்கா நினைவில்...


முதலில்,
கண்ணை விட்டு போன...
பிறகு,
என்னை விட்டு போன...
இப்ப 
மண்ணை விட்டு போன பிறகும்,
எனக்குள் ஏண்டி 
உன்னை விட்டு போயிருக்க...?

பித்து மனம் இப்பவெல்லாம்,
செத்துபோக நினைக்குதடி...
விட்டிடுவன் என் உசிரை
வீட்டில் சனம் இல்லையெண்டா !

என்னை நம்பி நாலுசிரு 
எதிலையா நிக்கையில,
செத்த உண்ட நினைப்பால 
பித்துக்கொண்டு நானும் செத்தா,
பாவம் இந்த சொந்தங்களை 
பாக்குறது யாரு புள்ளை ?

வாழ்க்கையை இவங்களுக்காய் 
வாழ்ந்துவிட்டு ராத்திரியில் 
வானத்தில நான் பாக்க,
வந்து முகம் காட்டி விடு,
நிலவாக - முழு 
மதியாக.


*- தமிழ் -*

No comments:

Post a Comment